சிவகிரி:சிவகிரி சந்தைப்பேட்டை கற்பக விநாயகர் கோயிலில் ஆடித்தபசு காட்சி நடந்தது. சிவகிரி சந்தை பேட்டை தெருவில் உள்ள கற்பகவிநாயகர் கோயில் சங்கரநாராயணர், கோமதியம்மாள் சமேதரராக உள்ள தனிச்சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிதபசு விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு ஆடித்தபசு அன்று மதியம் மூலவர்கள் அனைத்திற்கும் பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் சங்கரநாராயணரும், கோமதியம்பாளும் தனித்தனி சப்பரத்தில் ரதவீதிகளில் திருக்காட்சி கொடுத்தனர். பின்பு மேலரதவீதியில் தபசு காட்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாச்சியார் கட்டளையின் நிர்வாக அலுவலர் ராமராஜா, கணக்கர் பழனி, உபயதாரர்கள் பேராசிரியர் சக்திவேல் அர்ச்சகர்கள் பாலசுப்பிரமணியம், வெங்கட்ராமன் அன்னதான கமிட்டி சுப்பிரமணியன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முருகன், ஆறுமுகம், ஞானப்பழம், சங்கர், பொன்னுச்சாமி, வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.