""நீங்கள் இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும். அவன் விதித்துள்ள ஐங்காலத் தொழுகையையும், ரமலானின் நோன்பையும், ஏழை வரியான ஜக்காத்தையும் நிறைவேற்றி வாருங்கள். அதோடு, இறைவனின் இல்லமான கஃபாவையும் தரிசித்து ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். அப்போது சுவனபதி (சொர்க்கம்) உங்களுடையதாகி விடும், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். மேலும், ""நான் உங்களிடம் பலமான இரண்டு வஸ்துக்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை நீங்கள் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டால், ஒருபோதும் வழிதவறி விட மாட்டீர்கள். ஒன்று இறைவேதமாகிய திருக்குர்ஆன். மற்றொன்று எனது வாழ்க்கையும், வாய்மொழியுமான "சுன்னத் ஆகும், என்கிறார்கள். நோன்பிருக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஓட வேண்டிய பொன்மொழிகள் இவை. ஏனெனில், இறைவனே எல்லாம். இறைவனின் கட்டளைகளுக்கு நாம் பயந்து நடந்து நற்பலன்களைப் பெற வேண்டும். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31