Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மாவதி தாயார் கோவிலில் சேவை ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் கவுன்டர் இன்றி பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஆக
2013
10:08

ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாடும் பக்தர்களுக்கு, கூடுதல் டிக்கெட் கவுன்டர் இல்லாததால், நீண்ட வரிசையில் வெயிலில் பல மணி நேரம் நின்று அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள, 22 புனித தீர்த்தத்தை நீராடும் பக்தர்கள், கோயில் நிர்வாகத்திடம் டிக்கெட் (ஒரு நபருக்கு 25 ரூபாய்) வாங்கி, செல்ல வேண்டும். நாளுக்கு நாள் தீர்த்தமாடும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தாலும், இரு டிக்கெட் கவுன்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில், நிழல் கூரை இன்றி பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து, கூட்ட நெரிசலில் சிக்கி, தவித்து டிக்கெட் வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதில், வயதானவர், குழந்தைகள் மயக்கம் அடைகின்றனர்.  மேலும், பக்தர்கள் நிற்கும் நடைமேடையில், வியாபார கடைகள் ஆக்கிரமிப்பால், இரு வரிசையில் நிற்கும் பக்தர்கள், சாலையில் நடுவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனத்தில் சிக்கி, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பக்தருக்கு தேவை:  தீர்த்தமாட காத்திருக்கும் பக்தர்கள் நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்பு அகற்றி, போக்குவரத்து இடையூறு இன்றி, அகலமான நிழல் கூரையும், திருவிழா, விடுமுறை நாள்களில், கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதையில் குடிநீர் குழாய் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இதுகுறித்து கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: வெகு விரைவில் பக்தருக்கான, நிரந்தர நிழல் கூரை, கூடுதல் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்படும், என்றார். ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி, பர்வதவர்த்தினி அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar