Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஈரோடு பெரியாயி! கண்வர் மகரிஷி ஆலயம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மண்டையூர் முருகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
04:08

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மண்டையூரில் சாலையிலேயே உள்ளது முருகன்  ஆலயம். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் வேலை ஏந்தியபடி புன்னகை மாறா முகத்துடன் அருள்பாலிக்கிறார். ஆறுமுகம் பன்னிருகை கொண்ட கந்தவேள், இங்கே ஒரு முகமும் இரு கரமும் கொண்டு காட்சியளிப்பதும், வாகனமான மயில் அருகே இல்லாமல் இருப்பதும் ஏன்? என்ற கேள்வி எழுகிறது! அதற்கு பச்சைமயில் ஏறும் வேலன் இங்கே பாலனாகக் காட்சி அளிப்பதுதான் காரணம் என்ற பதில் கிடைக்கிறது. அதை உறுதி செய்கிறது இங்கே ஆட்சி செய்யும் முருகனின் பால தண்டாயுதபாணி எனும் திருநாமம். குழந்தை உருவில் இருப்பதால் இவரை வழிபடுவோர்க்கு குழந்தை வரம் நிச்சயம். ஆலயத்தின் திருச்சுற்றில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வணங்குகின்றனர் பெண்கள். அவர்கள் குறைகளைக் களைவதில் இந்த துர்க்கை வல்லவள் என்பது நம்பிக்கை. அடுத்து பக்த ஆஞ்சநேயர், நாகர் சன்னதிகளும் உள்ளன. அனுமனுக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தைமாதம் பூசத் திருவிழா அன்று முருகனுக்கு பதினாறு திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிஷேகமும் நடைபெறும். பல நூறு பக்தர்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்று முத்தான வாழ்வு பெறுகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar