Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் 1008 ... முனியப்பன் கோயிலில் அதிகாரிகள் கிடா வெட்டி வழிபாடு! முனியப்பன் கோயிலில் அதிகாரிகள் கிடா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய கோவில் யானை வசூல் விவகாரம் அறநிலையத்துறை கண்டிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
10:08

தஞ்சாவூர்:தஞ்சை பெரிய கோவிலில், பெண் யானைக்கு, முழு ஓய்வு கொடுத்து, அறிவிப்பு பலகை ஒன்றை, கோவில் வாசலில், அதிகாரிகள் வைத்துள்ளனர். தஞ்சை பெரிய கோவில் பெண் யானை வெள்ளையம்மாள், 63, வயதாகி விட்டதால் மூட்டு வலியால் அவதிப்படுகிறது. இதனால், புத்துணர்வு முகாமில் பங்கேற்க தகுதி பெறவில்லை.இந்த யானையை, பெரிய கோவில், இரண்டாம் கோபுர வாசலில், நிற்க வைத்து, வசூலில் பாகன்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை அடுத்து, உதவி பாகன், சாரங்கன், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தஞ்சை, அறநிலையத்துறை உதவி கமிஷனர், ஞானசேகரன் கூறியதாவது: யானை வெள்ளையம்மாளுக்கு, மூட்டு வலிக்கான சிகிச்சை, கோவில் வளாகத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மருத்துவர்களால், தரப்படுகிறது. அதன் உடல் நலம் கருதி, பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. யானை குறித்து, பொதுமக்கள் அறியும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

தஞ்சை பெரிய கோவில், இரண்டாம் கோபுர வாசலில், அறநிலையத்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: யானை வெள்ளையம்மாளுக்கு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி, உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள், பழங்கள், தேங்காய் போன்றவை வழங்க வேண்டாம். யானையிடம் ஆசி பெறுவது, போட்டோ எடுப்பது, யானை மீது அமர்வதும், "கண்டிப்பாக கூடாது. பாகன்களிடம் பணமோ, பொருளோ ஏதும் கொடுக்க வேண்டாம். யானைக்காக பொருள் அல்லது பணம் செலுத்த விரும்புவோர், திருக்கோவில் அலுவலகம் அல்லது யானை பராமரிப்பு உண்டியலில் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar