Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! முத்துமாலை அம்மன் கோயிலில் கொடை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

ஏரல்: உமரிக்காடு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள உமரிக்காட்டில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். கொற்கையை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னர்கள் அரசாண்ட பண்டைய நாளில் உமரிச் செடி என்ற ஒருவகை செடியை பகைவர்கள் வராத வண்ணம் அரணாக வைத்து வளர்த்தனர். எனவே இவ்விடத்திற்கு உமரிக்காடு என்ற பெயர் வந்தது. பொருநை நதியின் வடகரையில் உமரிக்காட்டில் எழுந்தருளிய முத்தாரம்மன் பக்தர்களின் துன்பத்தை நீக்கி எல்லா இன்பங்களும் கொடுக்கும் அம்மனாக அமைந்துள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை அம்மனுக்கு கொடை விழா நடக்கிறது. சிங்க வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவது மேலும் சிறப்பாகும். புகழ்பெற்ற முத்தாரம்மனுக்கு இந்த ஆண்டு கொடை விழா இன்று நடக்கிறது. இன்று காலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி கடல் சங்கு முகம் சென்று தீர்த்தம் கொண்டு வருதல், 7 மணிக்கு தீபாராதணை, காலை, மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் அபிஷேகத்திற்கு தாமிரபரணி நதி சென்று புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 7 மணிக்கு தீபாராதணையும் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் அலங்கார தீபாராதணை, 12.30 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமிக்கு பொங்கலிடுதல், பார் விளையாட்டு, முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. நள்ளிரவு 2.30 மணிக்கு அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பவனி வந்து ஊர் மக்களுக்கு அருள் புரிதல் ஆகிய கொடை விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து நாளை இரவு சென்னை வாழ் உமரிக்காடு நாடார் நலச் சங்கம் சார்பில் சென்னை கலைஞர்களின் பாசப்பறவைகள் இன்னிசை கச்சேரி நடக்கிறது. கொடை விழா ஏற்பாடுகளை உமரிக்காடு கிராம விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணன் நாடார் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் இராமசுப்பு நாடார், ஆழ்வார் நாடார், ரமேஷ் நாடார், குமரேசன் நாடார் ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar