சிவனேன்னு இருக்கேன் என்று பலரும் சொல்கிறார்களே.. ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2013 12:08
நான் சிவனேன்னு இருக்கேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க? என்று சொல்வதைத் தானே குறிப்பிடுகிறீர்கள். அமைதியாக இருப்பவனை ஏன் பிரச்னைக்கு உள்ளாக்குகிறீர்கள் என்பது இதன் பொருள். எப்போதும் சிவகதியில் லயித்திருக்கும் சிவயோகிகள் சிவனை மட்டுமே மனதில் இருத்தி தியானத்தில் இருப்பர். தூங்கும் போது, சாப்பிடும் போது கூட சிவசிந்தனை தான். இதை சிவோஹம் பாவனை என்பர்.