Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆந்திரா சிவன் கோவிலில் அரிய வகை ... திருப்பதி கோவில் உண்டியல் வசூல் சரிவு! திருப்பதி கோவில் உண்டியல் வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவில் யானைக்கு தீவிர சிகிச்சை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 செப்
2013
10:09

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு வலது தொடைப்பகுதி மற்றும் இடது உள்ளங்கால் பகுதியில் ஏற்பட்ட புண் ஆறாமல் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், ராஜேஸ்வரி என்ற, 35 வயதுடைய யானை வளர்க்கப்பட்டு வருகிறது. சிறு வயதில், வாத நோயால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு, இடது கால் சூம்பி, ஊனம் ஏற்பட்டது. அதனால், தொடர்ந்து நிற்க முடியாமல், படுக்கவும் முடியாமல், ராஜேஸ்வரி அவதிப்பட்டு வருகிறது. சில ஆண்டுக்கு முன், ராஜேஸ்வரி, தவறி கீழே விழுந்ததில், உடல் முழுவதும் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், ராஜேஸ்வரியை, காசநோய் தாக்கியது. அதற்காக, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, நோய் குணமடைந்த நிலையில், ராஜேஸ்வரி உடல் மெலிந்து காணப்பட்டது. அதோடு, ராஜேஸ்வரியின் வலது தொடைப்பகுதி மற்றும் இடது உள்ளங்காலில் உள்ள புண் ஆறாமல் இருந்து வருகிறது. அதற்காக, சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் ஜெயராமன் தலைமையில், டாக்டர் பொன்னுவேல், நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் சுப்ரமணி, தர்மசீலன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர், நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு வந்து, யானை ராஜேஸ்வரிக்கு அளித்தனர். கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது: கோவில் யானைக்கு வலது தொடை, இடது உள்ளங்காலில் ஏற்பட்ட புண் இன்னும் ஆறவில்லை. அதற்காக, வாரம் ஒருமுறை சிகிச்சை அளிப்பதால், விரைவாக குணமாகி வருகிறது. மேலும், போதிய நடைப்பயிற்சி கொடுக்கவும், முறையாக குளிப்பாட்டவும், சத்தான தீவனம் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோசாலையில் உள்ள பசுக்களும், முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள இரு பொலிமாடுகளால், பசுக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது. எனவே, இரு பொலிமாடுகளையும், வேறு கோசாலைகளுக்கு அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar