Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் திருக்கல்யாண வைபவம் பழ­வேத்­தம்மன் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2013
11:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ,பாதுகாப்பு புலனாய்வு பிரிவு போலீசார்  நேற்று ஆய்வு செய்தனர்.
ஆண்டாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக  பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டாள் கோயில்  வடபத்ரசாயி கோயில்களில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில்கள் மூலம்  தீவிர சோதனைக்கு பின்  பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி  ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல  பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்  கண்காணித்து வருகின்றனர். ஜூலையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த சஜித்குமார் எஸ்.பி.  ராதாகிருஷ்ணன் எஸ்.ஐ.  ஆகியோர்  கோயிலை ஆய்வு செய்து  பாதுகாப்பிற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து  கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன் தினம்  பாதுகாப்பு காரணங்களுக்காக  கோயில் சுவரை யொட்டி ,மாடவீதிகளில் நின்ற மரங்கள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி செயல் அலுவலர் சுப்பிரமணியனிடம் கேட்டறிந்தனர். பின் ராஜகோபுரம்  ஆண்டாள் கோயில் விமானம்  ஆடிப்பூர மண்டபம்  பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில்  ஆய்வு நடத்தினார். கண்காணிப்பு கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு  மூன்று இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டு  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக நேற்று இரவு  கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar