Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா! விநாயகர் சிலைகளுக்கு ரசாயன வர்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தேரோட்டம்: சாலைகள் சீரமைக்க முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2013
11:09

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவிவையொட்டி நடக்கும் தேரோட்டத்துக்கு முன் திருவண்ணாமலையில், சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நவம்பர், 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கிறது. நவம்பர், 17ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சி மீது மஹா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகள் துவங்க வரும், 8ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. தொடர்ந்து தீபத் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் நடக்கிறது. தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., முத்தரசி, டி.ஆர்.ஓ. வளர்மதி, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகரை இணைக்கும் முக்கிய சாலைகள் சீரமைப்பு, தேரோடும் மாடவீதி சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதி, நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகள், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது, முருகர் தேர் விரிசல் ஏற்பட்டது, அதற்கு சாலையில் இருந்த மேடு, பள்ளங்களும் முக்கிய காரணம் என விவாதிக்கப்பட்டது, தீபத்திருவிழாவுக்கு சில நாட்களுக்கு முன்பாக அவசர, அவசரமாக சாலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; பொன்னேரியில் நடந்த சந்திப்பு  திருவிழாவில் கரிகிருஷ்ண பெருமாளும் கருட வாகனத்திலும், ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வரகூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா ... மேலும்
 
temple news
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டதன் மூலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar