Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொருள் காத்த பூக்காம்பு கந்தசஷ்டி கவசத்தைத் தினமும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தொடுவோம் சிகரம் தொடுவோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
12:09

*தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் விரும்புகிறபடியே மாற தியானம் ஒன்றே கைகொடுக்கும்.
*மனதில் நிமிஷத்துக்கு நிமிஷம் தோன்றி மறையும் எண்ணமெல்லாம் தியானம் ஆகாது.
*புதர் கூட்டத்திலே தீப்பிடித்தது போல, மனதிலுள்ள கவலைகளை எரிக்கும் ஜோதியாக விளங்குவதே தியானம்.
*உள்ளத்தில் தீரம், அமைதி, பலம், தேஜஸ் (ஒளி), சக்தி, அருள், பக்தி ஆகிய உயர்ந்த எண்ணங்களை நிரப்புங்கள். எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள்ளே நுழைய இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
*தொடக்கத்தில் சிறுமையான எண்ணங்கள் அறிவில் புகுந்து கொண்டு தொல்லைப்படுத்தும். வெளியே பிடித்து தள்ளினாலும் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்யும். நல்ல எண்ணத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டால், தொல்லைப்படுத்தி வந்த தீய எண்ணங்கள் தானாகவே ஓடிவிடும்.
*பசிக்கு உண்ணும் உணவைப் போல, அன்றாடம் தியானம் செய்வது அவசியம். சோற்றை விட்டாலும், ஒரு தனியிடத்தில் அமர்ந்து தியானம் செய்ய மறவாதீர்கள்.
*வாயினால் பழங்கதை சொல்வது போல, முணுமுணுப்பது வழிபாடு ஆகாது. உயிரின் உள்ளிருந்து பிரார்த்தனை வர வேண்டும்.
*எப்போதும் உனது சொந்தக் கருத்துடன், சொந்த வசனங்களில் பிரார்த்தனை இருப்பது தான் தியானம்.
*கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில்விழுவது போல, மனித இனம் நன்மையை நன்றாக உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது. இந்த நிலைமையில் இருந்து மீண்டு வர வேண்டும்.
*அன்பே இன்பம் தரும். பகைமையால் உலகம் அழியும். இந்த உண்மையை உணர்ந்துள்ள நாம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவோம்.
*வாழ்வில் குறுக்கிடும் நஷ்டம், துன்பம் இவற்றை பொருட்படுத்தாமல் தைரியத்தை இழக்காமல் உண்மையின் வழியில் செல்பவனே, வெற்றி சிகரத்தை தொடுவான்.
*மனதிற்குள் நுழையும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பத்தில் தடுக்கி விழுந்தாலும், பயிற்சியின் பேரில் எழத்தான் செய்வோம்.
*நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால் நாளடைவில் வெளியுதவிகள் தாமே வரும்.
*ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் வந்தாலும், செயலில் உறுதியாக இருந்து வெற்றி காண்பவனே மனிதர்களில் சிறந்தவன்.
*மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை. பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்களே பகைவர்கள். இவற்றை ஒரே பெயரில் நம்பிக்கைக்குறைவு என்று சொல்கிறார்கள். இந்தஅசுரனை ஒழித்து விட்டால், நமக்கு நல்லகாலம் விரைவில் வந்து விடும்.
-பாரதியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar