Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10 நாள் திருவிழா.. 9 சுவை உணவு!
முதல் பக்கம் » ஓணம் பண்டிகை
ஓணம் பண்டிகையின் சிறப்புகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2013
05:09

பலி பலியாகாதது ஏன்?: அசுரகுலத்தில் பிறந்தாலும் பிறவியிலேயே ஹரிபக்தி கொண்டவன் பிரகலாதன். இரண்யனைக் கொன்ற நரசிம்மன், பிரகலாதனுக்கு லட்சுமியை மடியில் தாங்கியபடி லட்சுமி நரசிம்மனாக காட்சி அளித்து, இனிமேல் உன் வம்சத்தில் பிறப்பவர்களை நான் கொல்ல மாட்டேன் என்று வரம் அளித்தார். பிரகலாதனின் பேரனான வைரோசனனின் மகனே பலிச்சக்கரவர்த்தி. மற்ற அவதாரங்களில் உயிர்களைக் கொல்லும் தோஷம் விஷ்ணுவுக்கு ஏற்பட்டாலும், வாமன அவதாரத்தில் யாரையும் அவர் கொல்லவில்லை. தானம் கேட்ட வாமனர், மூன்றாவது அடிக்காக பலியின் தலையில் திருவடியை வைத்து பாதாளலோகத்திற்கு அனுப்பி விட்டார். தாத்தாவுக்காக பேரனின் உயிரைக் கொல்லாமல் அருள்புரிந்தார். வாமன அவதாரத்தில் மட்டும், பகவான் அசுரர்களைக் கொல்லாமல் விட்டதாலும், ஆண்டாள் அவரை உத்தமன் என்று பாராட்டிப் பாடியதாகச் சொல்வர்.

இவனும் மாயன் தான்: மாயம் செய்வதில் வல்லவன் என்பதால் கிருஷ்ணருக்கு மாயன் என்ற பெயருண்டு.  மாயன் என்ற சொல் வாமனருக்கும் பொருந்தும். குள்ளமாக வந்து மகாபலியிடம் மூன்றடிமண் கேட்டார். ஆனால், திருவடியால் அளக்கும்போது திரிவிக்ரமானாய் வானுக்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார். சின்ன அடியைக் காட்டி பெரிய அடியால் பூமியை அளந்ததால் வாமனருக்கும் மாயன் என்ற பெயர் உண்டானது.

இவனே உத்தமன்: மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை. பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன். தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன். தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன். பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது இழிசெயல். தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.

வேல் அளித்த நாயன்மார்: சீர்காழியில் திருமால், உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் திருவடி உயர்த்தி நிற்கும் காட்சியைத் தரிசிக்கலாம். இங்கு திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தரின் முன்னிலையில் பாசுரம் பாடியது குறிப்பிடத்தக்கது. அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த சம்பந்தர், தன் கையிலிருந்த வேலை ஆழ்வாருக்குப் பரிசாகக் கொடுத்தார். இங்கு பெருமாள் ஒரு காலை உயர்த்தி இருப்பதோடு, ஒரு விரலையும் மேலே உயர்த்தியபடி நிற்கிறார். மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என்று கேட்பதுபோல இது அமைந்துள்ளது. உன்னிடமுள்ள ஆணவம் என்ற ஒன்றே ஒன்றை மட்டும் விடு. தூக்கிய என் திருவடியை உனது சிரசிலும் வைப்பேன், என்று சொல்வதுபோலும் இருக்கிறது.

முப்பெரும் தீர்த்தம்: வாமனர் யாசகம் பெற்ற போது, அதை தாரை வார்த்து கொடுப்பதற்காக மகாபலியின் மனைவி விந்தியாவளி கிண்டியில் (கெண்டி) இருந்து தீர்த்தம் வழங்கினாள். அந்த தீர்த்தம் கையில் பட்டதும் வாமனர் திரிவிக்ரமராக மாறி உலகத்தை அளக்கத் தொடங்கினார். அவரது திருவடி பிரம்மாவின் உலகமான சத்தியலோகத்தை அடைந்தது. திருவடியைக் கண்ட பிரம்மா, தன்னுடைய கமண்டல தீர்த்தத்தை அபிஷேகம் செய்து பாதபூஜை செய்தார். பின், அந்த திருவடி, அண்டத்தைச் சென்றடைந்தது. அண்டத்தைச் சுற்றி ஆவரணஜலம் என்ற தீர்த்தம் உண்டு. அதுவும் வழியத்தொடங்கியது. கையில் வாங்கிய கிண்டித்தீர்த்தம், பிரம்மாவின் அபிஷேக தீர்த்தம், ஆவரண தீர்த்தம் மூன்றும் சேர்ந்து நேர்கோட்டில் விழுந்தது. இதில் பிரம்மாவின் அபிஷேக தீர்த்தமே மதுரை திருமாலிருஞ்சோலையில் (அழகர்கோவில்) நூபுர கங்கையாகக் கொட்டுவதாக ஐதீகம்.

மந்திர மரம்: திருமால் வாமனராக அவதரித்ததும், ஐந்து வயதில் உபநயன நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சூரியனே நேரில் வந்து வாமனருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தார். பார்வதிதேவி முதல் பிøக்ஷ (யாசகம்) இட்டாள். அப்போது பலாச தண்டத்தைக் கையில் ஏந்தி வாமனர் காட்சிஅளித்தார். பலாசதண்டம் வழங்குவதற்கு காரணம் ஒன்று உண்டு. பலாசம் என்பது ஒரு மரம். ஒருசமயம், வேதவிற்பன்னர்கள் பலர் ஒன்றுகூடி, பலாசமரத்தின் அடியில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தின் மகத்துவத்தைப் பேசினர். அம்மந்திரத்தில் மூன்று பாகம் இருப்பது போல, அந்த மரத்தின் இலைகளும் மூன்றுகூறாக மாறிவிட்டன. பலாசதண்டத்துடன் வாமனரின் தேஜஸ் ஜொலித்தது.

மீண்டும் பாதம் பதிப்பாயா? விக்ரமனுக்கு ஒரு விண்ணப்பம்!

விஷ்ணு பக்தரான ஆளவந்தார், திரிவிக்ரம மூர்த்தியே! மீண்டும் ஒருமுறை உன் திருவடியை என் தலையில் வைப்பாயா? என்று கேட்டார். மீண்டும் ஒருமுறை என்கிறீரே! இதற்கு முன் எப்போது உன் மீது வைத்தேன்?, என்று எதிர்கேள்வி கேட்டார் பெருமாள். திரிவிக்ரமனாக வந்தபோது திருவடியால் உலகை அளந்தீர். நீரும், கடலும், வானும், மலையும் ஒருசேர அளந்தபோது உம் திருவடி படாத இடமே உலகத்தில் இல்லை. ஆனால், அப்போது அடியேன் கல்லாக இருந்தேனோ? மண்ணாக இருந்தேனோ? உம் திருவடியின் அருமை தெரியாமல் இருந்து விட்டேன். ஆச்சாரியார்களின் அருளால் இப்போது உம் பெருமையை உணர்ந்து விட்டேன். மறுபடியும் ஒருமுறை என் சிரம் மீது பாதம் வைத்தால் திருவடியில் பதிந்திருக்கும் சங்கு, சக்கர, அங்குச, துவஜ ரேகைகள் பட்டு நற்கதி பெறுவேன், என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

வலம் வந்த கரடியார்: திறமைசாலிகளை ஜாம்பவான் என்று எல்லாரும்  பாராட்டுவர். ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருக்கும் பாத்திரம் ஜாம்பவான். அந்த ஜாம்பவான் வாமன அவதாரத்தைப் பாராட்டியுள்ளார். கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவது தான் திருமாலின் அவதார நோக்கம். ஆனால், வாமன அவதாரத்தில், அவர் யாரையும் கொல்லவில்லை. தன் திருவடியை மட்டும் பலியின் தலை மீது வைத்து ஆணவத்தைப் போக்கி அருள் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஜாம்பவான் வாமனரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பறை முழக்கி வலம் வந்து வணங்கினார்.

சொன்னா புரியாது: நர்மதா நதிதீரம் நோக்கி வாமனர் வந்து கொண்டிருந்தார். வாமனர் என்ற சொல்லுக்கு அழகானவர், குள்ளமானவர் என்று பொருள். தேவகுரு பிருகஸ்பதி அளித்த யக்ஞோபவீதம்(பூணூல்) அவருடைய மார்பில் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கையில் கமண்டலமும், தண்டமும் ஞானத்தின் அடையாளமாக இருந்தன. பிரம்மச்சாரியான அந்த இளையவர், தன்னைக் காண வர மாட்டாரா என்று மகாபலி சக்கரவர்த்தி ஏங்கினான். பிரம்மதேஜஸ் நிரம்பிய முகத்துடன் வந்து கொண்டிருந்தார். மகாபலி அவரிடம்,தாங்கள் யாரென்று தெரியவில்லையே?, என்று கேட்டான். அதற்கு அபூர்வ: என்று பதிலளித்தார் வாமனர். இதன் பொருள், இதுவரை என்னைப் பார்த்திருக்கவும் முடியாது. நான் யார் என்பதைச் சொன்னாலும் புரியாது, என்பதே. இறைவனை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதையே அபூர்வ என்ற சொல்லால் வாமனர் உணர்த்தினார்.

மனைவியை மறைத்த பிரம்மச்சாரி: மகாபலி யாகம் நடத்தும் நர்மதை நதிக்கரைக்கு வாமனர் கிளம்பினார். விஷ்ணுவை விட்டு லட்சுமி எப்போதும் பிரிய மாட்டாள் என்பதால், வாமனரின் ஸ்ரீவத்சத்தில் (மார்பில்) அமர்ந்திருந்தாள். போட்டுக் கொண்ட வேஷம் சரியில்லையே! பிரம்மச்சாரியாக இருக்கும்போது ஒரு பெண்ணை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதே! லட்சுமியின் கடைக்கண்பார்வை மகாபலியின் மீது பட்டு விட்டால் அவனிடம் யாசகம் பெற முடியாமல் போய்விடுமே என்று வாமனர் பலவிதமாக யோசித்தார். க்ருஷ்ணாஜினம் என்னும் ஆடையைப் போர்த்திக் கொண்டு திருமகளின் பார்வையை மறைத்துக் கொண்டு சென்று யாசகம் கேட்டார்.

இந்திரனின் தம்பி: கஷ்யபருக்கும் அதிதிக்கும் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் பிள்ளைகள். மகாபலிமன்னன் தன் குலகுருவான சுக்ராச்சாரியரின் மூலம் யாகம் செய்து வலிமையான தேர், ஆயுதங்களைப் பெற்றான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்தான். இந்திரன் மகாபலிக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். தன் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்திய தாய் அதிதி, விஷ்ணுவிடம் சரணடைந்தாள்.  இதையடுத்து ஆவணி திருவோணம், துவாதசி திதியன்று விஷ்ணுவே அவளின் கர்ப்பத்தில் வாமனமூர்த்தியாக அவதரித்தார். அதிதியின் பிள்ளை என்பதால் வாமனர், இந்திரனுக்கு தம்பியாகிறார்.

அடிக்கு ஒரு பாடல்: வாமனராக வந்த மகாவிஷ்ணு, பலிச்சக்கரவத்தியிடம் யாசகமாக மூன்றடி கேட்டார். அதை நினைவூட்டும் விதத்தில் ஆண்டாள் திருப்பாவையில் மூன்று முறை உலகளந்த பெருமாளின் பெருமையைப் போற்றுகிறாள். முப்பது பாடல்களில் 3,17, 24 ஆகிய மூன்று பாசுரங்களில் (அடுத்தடுத்த பத்து பாடல்களுக்குள் ஒன்றாக) ஓங்கி உலகளந்த உத்தமன், அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்று குறிப்பிடுகிறாள். இவற்றைப் பாடினால் மழைவளம் சிறக்கும் என்பர்.

 
மேலும் ஓணம் பண்டிகை »
temple news
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ... மேலும்
 
temple news
ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது. தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, ... மேலும்
 
temple news
கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் துவங்கி திருவோணம் வரை ... மேலும்
 
மகாபலி சக்கரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்ய தேர்ந்தெடுத்த இடம்  நர்மதை நதிக்கரை. நர்மதை சாதாரண நதியல்ல. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar