பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
செஞ்சி:இஞ்சிமேடு கல்யாணவரத ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ ஹோமம் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவில் கல்யாண வரத ஆஞ்சநேயருக்கு செப் 13 மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.காலை 7 மணிக்கு கல்யாண வரத ஆஞ்சநேயர், பெரும்தேவி தாயார், வரதராஜ பெருமாள், கருடாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9 மணிக்கு துவங்கி 1 மணிவரை இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் ஒரு லட்சம் மந்திரங்களும், தன்வந்திரி, சுதர்சன, நரசிம்ம, கருட ஹோமங்களும் நடந்தன. சீதா தேவி, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர்.கல்யாண வரத ஆஞ்சநேயருக்கு கலச நீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனமும், வெள்ளிக் காப்பு அலங்காரமும் செய்தனர். பகல் 1.30க்கு தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது.