Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணலிவிளை முத்தாரம்மன் கோயில் கொடை ... அஷ்டமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்துங்கநல்லூர் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2013
10:09

செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் துவக்கி வைத்தார். செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த 9ம் தேதி அன்று செய்துங்கநல்லூர், கருங்குளம், தெற்குகாரசேரி ஆகிய கிராமங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. தினமும் பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பின்னர் சிலைகளை தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கருங்குளம், தெற்குகாரசேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த விநாயகர் சிலைகள் செய்துங்கநல்லூர் சிவன் கோயிலுக்கு வந்தது. அங்கிருந்து இந்து முன்னணியினர் ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் இசக்கி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து பேசினார். இந்த ஊர்வலம் செய்துஙகநல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக வந்து திருச்செந்தூர் மெயின் ரோட்டை அடைந்தது. அங்கிருந்து அருகில் உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar