செஞ்சி:செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 4 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். இரவு ஏகாம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். திருப்பணிக் குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.