சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2013 10:09
ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலுக்கு சொந்தமான வசந்த மண்டபத்தை சீர்படுத்தி தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு நோக்கியுள்ள பிரசித்திபெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பலர் தங்கள் திருமணங்களை நடத்துவர். கோயிலுக்கு எதிரே கோயிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வசந்த மண்டபம் உள்ளது. கோயில் திருமணம் நடத்துபவர்கள் இந்த மண்டபத்தில் தான் வரவேற்பு விழா நடத்துவதுடன் சாப்பாடு உட்பட பல விசேஷலங்களை நடத்துவர். கோயில் வளாகத்திற்கு உள்ளேயே கோயிலின் எதிரே பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள இந்த மண்டபம் 1905ம் வருடம் கட்டப்பட்டது. சுமார் 108 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த கட்டடம் பழுது பார்க்காத நிலையில் சமைத்த உணவுகளை வைக்கும் இடத்தில் மேலே காரை பெயர்ந்து விழுந்துள்ளது. மண்டபத்தின் நடுவிலேயும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது சமையறையில் மேற்கூரையில் உள்ள காரை மேலும் பெயர்ந்து விழுந்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். நாள் ஒன்றிற்கு 1500 ரூபாய் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் மண்டபத்தை சீரமைக்காமல் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் மண்டபம் உள்ளது. மேற்கூரையை மாற்றி அமைத்து மண்டபத்தை சீரமைத்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.