Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டியது அருளும் கொண்டத்துக்காளி: ... மயூரநாதர் கோவில் தங்க கலசம் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை! மயூரநாதர் கோவில் தங்க கலசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிலில் சிறிய லட்டு தயாரிப்பு: அதிகப்படுத்த திட்டம் இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 செப்
2013
11:09

திருப்பதி: திருப்பதி கோவிலில், 20 லட்சம் சிறிய லட்டுகள் தயாரிக்க, 20 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டும் திட்டம் எதுவும் இல்லை என, கோவில் தேவஸ்தான மடப்பள்ளி அதிகாரி கேசவராஜு தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: திருப்பதி கோவிலில், காலை, 7:30 மணியில் இருந்து, நைவேத்திய பிரசாதங்கள்; பகல் 12:00 மணிக்கு, கல்யாண உற்சவ பிரசாதங்கள்; இரவு, 7:30 மணிக்கு, நைவேத்திய பிரசாதங்களாக, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை மற்றும் தயிர்சாதம் வழங்கப்படுகின்றன. இப்பிரசாதங்கள் தீர்ந்துவிட்டால், சிறிய லட்டுகளும், பின்னர் கற்கண்டும் வழங்கப்படுகின்றன. பக்தர்களுக்கு, 20 கிராம் எடையுள்ள, சிறிய லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதற்காக, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் சிறிய லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிறிய லட்டுகள், கோவில் உள்ளேயே தயாரிக்கப்பட்டு வந்தன. 15 ஆண்டுகளுக்கு முன், கோவிலுக்குள் ஏற்பட்ட இட நெருக்கடி காரணமாக, கோவிலுக்கு வெளியில் உள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளையிடம், லட்டு தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அங்கு தயாரிக்கப்படும் லட்டுகளை, கோவிலுக்கு எடுத்து வர சிரமமாக இருப்பதால், பெரிய லட்டுக்காக, பூந்தி தயாரிக்கும் கட்டடத்தின் மேல்தளத்திற்கு, சிறிய லட்டு தயாரிக்கும் இடத்தை மாற்ற, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டடத்தில், சிறு மாற்றங்கள் செய்த பிறகு, சிறிய லட்டு தயார் செய்யப்படும்.

ஆர்டரின் பேரில் தயாரிப்பு: தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் நடைபெறும், சிறப்பு பூஜைகள் மற்றும் விழாக் காலங்களில், சிறிய லட்டு பிரசாதம் விற்கப்படுகிறது. அப்போது, அவர்களுக்கு அதிக லட்டு தேவைப்பட்டால், தேவஸ்தான செயல் அதிகாரி அனுமதி பெற்ற கடிதத்துடன், ஒரு லட்டு, மூன்று ரூபாய் விலையில், எவ்வளவு லட்டு தேவையோ, அதற்கேற்ப டி.டி., இணைத்து அளிக்கும் கோவில்களுக்கு, இந்த லட்டுகள் தயார் செய்து வழங்கப்படுகின்றன.

மறுப்பு: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை இருக்கும்போது, 20 லட்சம் சிறிய லட்டுகள், தயார் செய்வதற்கு அவசியம் இல்லை. பிற கோவில்களுக்கும், எப்போதாவது தான், சிறிய லட்டுகள் தயார் செய்து வழங்கப்படுகின்றன. எனவே, தினசரி, 25 ஆயிரம் சிறிய லட்டுக்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar