சென்னை: சென்னையில், பச்சை நிற சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில், சாயி பிரசார் சேவா டிரஸ்ட் சார்பாக, சாயி பிரார்த்தனை ஹோமம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு கோபூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. காலை 10:00 மணிக்கு பச்சை நிற சாய்பாபாவிற்கு, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாயிநாம ஜெபம் நடந்தது. மாலையில், கோவை ஜெகநாத சுவாமிகள் சிறப்புஉரையாற்றினார். சாயிசத் சரித்திரத்தை தமிழில் மொழி பெயர்த்த, சொக்கலிங்கம் சுப்பிரமணியத்திற்கு, விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.