ஏர்வாடியில் பாதுஷா நாயகம் தர்காவிற்கு வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரிப்பால் தர்கா பகுதிகளில் மக்கள் கூட்டம் களைகட்டி காணப்படுகிறது. ஏர்வாடியில் உள்ள புகழ் பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்த்தான் செய்யது இபுறாகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 830ம் ஆண்டு உரூஸ் என்னும் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த செப்., 7ல் மவ்லீது ஷரீப் ஓதப்பட்டு துவங்கியது. செப்., 29ல் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. வெளி மாநில, பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வேண்டுதலை நிறைவேற்ற தர்காவிற்கு வரத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக தர்ஹாவில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும்,கூடுதல் வசதிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையில் தர்ஹா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.