புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம் ராதா ருக்மணி சமேத பக்தவத்சல குண பாண்டுரங்கன் கோவிலில், புரட்டாசி மாத உற்சவம் நேற்று துவங்கியது. கோவிலில், முதல் சனிக்கிழமையான நேற்று காலை 6:00 மணிக்கு பாண்டுரங்க பஜன் சமாஜ், கண்ணபிரான் நாம சங்கீர்த்தனம், வைத்திக்குப்பம் பஜனை கூடத்தினரின் பாண்டுரங்க லீலையும், இரவு திருவந்திபுரம் பாதயாத்திரை நடந்தது. விழாவில் வைத்திக்குப்பம் கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.