ஏர்வாடி: திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானது திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது புரட்டாசி சனிக்கிழமைகளில் நடக்கும் கருடசேவையும் ஒன்றாகும். அதன்படி புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு காலையில் திருமலை நம்பிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகத்துடன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் சாயரட்சை பூஜையும், அதனைதொடர்ந்து மலைநம்பி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியை காண தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயர்மட நிர்வாக குழு தலைவர் அறிவழகபாண்டியன், மண்டகப்படிதாரர் கோதைச்சேரி சுப்பையா என்ற சுந்தரராமானுஜம் ஆகியோர் செய்திருந்தனர்.