பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
மாமல்லபுரம்: திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில்களில், அக் 5 நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்யகல்யாண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில், 62வது தலமான இக்கோவிலில், ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயார் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இங்கு, அக் 5 முதல் வரும் 13ம் தேதி வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. விஜயதசமி நாளான, 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சுவாமி, திருவிடந்தை, தெற்குபட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெற இருக்கிறது. இதேபோன்று, மாமல்லபுரம் ஸ்தலசயனபெருமாள் கோவிலிலும், அக் 5 முதல், வரும் 13ம் தேதி வரை உற்சவம் நடைபெறும். இதையொட்டி தினமும் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடைபெறுகிறது. 8ம் தேதி விசாக நட்சத்திரத்தையொட்டி, மாலை, 3:00 மணிக்கு, சுவாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடும், மாலை, 5:30 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.