பதிவு செய்த நாள்
05
அக்
2013
11:10
மாமல்லபுரம்: சதுரங்கபட்டினம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள அறநிலையத் துறை கோவில் நில வாடகைதாரர்களிடம், வாடகை நிலுவைத் தொகை, 1.33 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. சதுரங்கபட்டினத்தில், அறநிலையத் துறையின் கீழ், மலைமண்டல பெருமாள் மற்றும் திருவரேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமான இடத்தில், 15 பேர் கடைக்காகவும், 14 பேர் வீட்டுமனைக்காகவும் வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், 9 பேர் வாடகைக்குக் கடை நடத்தி வருகின்றனர். சதுரங்கபட்டினம் வாடகைதாரர்கள், 1.12 லட்சம் ரூபாயும், மாமல்லபுரம் வாடகைதாரர்கள், 21 ஆயிரத்து 530 ரூபாயும் நிலுவை செலுத்த வேண்டிஇருந்தது. இணை ஆணையர் உத்தரவின்பேரில், தற்போது இத்தொகை முழுவதும் வசூலிக்கப்பட்டு உள்ளது.