ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
ஆத்தூர் சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அம்மன் சன்னிதி, கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.