Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கண் திறப்பு வைபவம் ... சபரிமலை நடை அடைப்பு: நவ.1 ல் மீண்டும் திறப்பு! சபரிமலை நடை அடைப்பு: நவ.1 ல் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2013
10:10

உடுமலை: உடுமலை அருகே, 3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை உட்பட பல வரலாற்று சின்னங்கள், ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், கொங்கல்நகரத்தில், கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி கல்வெட்டியல் படிப்பு மாணவர்கள், பேராசிரியர் ரவி தலைமையில், ஆய்வு நடத்தினர். இதில், பழமை வாய்ந்த, கல்லறைகள் கண்டறியப்பட்டன. விவசாயி செல்வராஜ் தோட்டத்திலும், கோவில் தோட்டம் எனப்படும் பகுதியிலும், விவசாயி தம்பியின் தோட்டத்து கிணற்றின் பக்கவாட்டு சுவரிலும், இவை கண்டுபிடிக்கப்பட்டன. இதே கிராமத்து விளைநிலத்தில், 20 அடி உயர நடுகல்லையும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். பழங்கால மக்கள் இரும்பை உருக்கி, ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தயார் செய்ததற்கான, இரும்புக் கசடுகள் மேற்பரப்பு ஆய்வில் கிடைத்தன. சாம்பல் மேடு பகுதியில், அக்கால மக்கள் பயன்படுத்திய, சிறிய மண்கலம், கருப்பு, சிவப்பு வண்ணப்பூச்சு உடைய மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டன; மசராயன் கோவில் பின்பகுதியில், மனித எலும்புகளும், முழுமை பெற்ற மண்கலங்களும் இருந்துள்ளன.

இது குறித்து, கல்வெட்டியல் பேராசிரியர் ரவி கூறியதாவது: கொங்கல்நகரம் கிராமத்தில், இனக்குழு காலகட்ட நாடோடி வாழ்க்கை முதல், வாழ்விடத்தை அமைத்து, பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் கண்டறியப்பட்டுள்ள கல்பதுக்கை எனப்படுவது, இறந்தவர் நினைவாக மூன்று கற்களை கொண்டு, கல்லறை எழுப்பி, அதை வணங்கும் முறை. இவை, 3500 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம். ஒரே கிராமத்தில், இத்தகைய பல கட்ட வரலாற்று சான்றுகள் கிடைப்பது அரிது. உப்பாறுபடுகை எனப்படும் பகுதியில், மண்பாண்டம் மற்றும் இரும்பு பயன்பாட்டு காலத்திற்கான பல்வேறு சான்றுகள், கண்டறியப்பட்டுள்ளன. 300 ஏக்கர் பரப்பில், கொங்கல்நகரம் கிராமத்தில், இத்தகைய வரலாற்றுச் சான்றுகள் அதிகளவு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar