Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மபுரி தட்சணகாசி கால பைரவர் ... இறுதி கட்டத்தில் நரசிங்கப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான கோவில் திருப்பணியில் மந்தம்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 அக்
2013
10:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் அம்மன் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணி மந்தமாக நடப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ளது சூலக்கல் அம்மன் கோவில். 300 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில், கருவறையில் வடக்கு திசை பார்த்த சூலாயுத வடிவிலான அம்மன் காட்சியளிக்கிறார். மேலும், பிரதிஷ்டி தெய்வமாக சிலைக்கு பின் மேலும் ஒரு அம்மன் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு மூலஸ்தானத்தில் உற்சவமூர்த்தியும் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக சுமார் 10 அடி உயரத்தில் ஐந்து குதிரை சிலை கட்டப்பட்டுள்ளன.கடந்த 1994ம் ஆண்டு இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் உள்கட்டமைப்பு, மண்டபம், சுற்றுச்சுவர் அனைத்தும் சிதிலமடைந்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ஆண்டுதோறும் வைகாசி மாதம், தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். திருக்கல்யாணத்துடன் துவங்கும் இவ்விழா மூன்று நாட்கள் களைகட்டும். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அம்மன் தேரும், விநாயகர் தேரும் வீதிகளில் உலா வருவது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆனால், கோவில் தேர் கரையான் அரித்து பழுதானதால் தேர்த்திருவிழாவும் நடத்தப்பட வில்லை.கடந்த ஓராண்டுக்கு முன் கோவில் மண்டபம் மற்றும் தேர் பராமரிக்க பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டும்; பணிகள் மிக மந்தமாக நடக்கின்றன. இதனால் பக்தர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் தேர்த்திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அறநிலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சூலக்கல் அம்மன் கோவிலுக்கு மண்டப பணிகளுக்கு ரூ.15 லட்சமும், தேரை புதிதாக மாற்றியமைக்க ரூ.27 லட்சமும் கோவில் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கிய நிலையில், வரும் பிப்., மாதத்துக்குள் விழாக்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar