Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணைக்கு அளவில்லை! தொழில் தொடங்கும்போது சுபம், லாபம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யானையின் பலம் எது தும்பிக்கையிலே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
03:10

*நம்பிக்கை என்பது புயல்காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அசையாமல் நிலையாக நிற்கும் இமயமலை போன்றது.
*இதயத்தில் கடவுள் இருந்து நம்மை வழிநடத்துகிறார் என்ற உறுதி ஒருவனுக்கு இருக்குமானால், அவனால் அடைய முடியாத விஷயம் என்றும் ஏதுமிருக்காது.
*யானைக்கு பலம் தும்பிக்கை. மனிதனுக்கு பலம் நம்பிக்கை. நம்பிக்கையின்மையே பலவீனம். என்ன துன்பம் நேர்ந்தாலும் தளராத நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்.
*உண்மை என்னும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் தோல்வி ஏற்பட்டாலும் கூட மனஅமைதி சிறிதும் குறையாது.
*நம்பிக்கையின்மையே சந்தேகத்திற்கும் எல்லாம் தாய். அதே சமயத்தில், மூடநம்பிக்கையும், மூடத்தனமான உற்சாகமும் நிரந்தரமான நன்மையை உண்டாக்குவதில்லை.
*பிறரிடமிருந்து நம்பிக்கையை இரவலாகப் பெற முடியாது. அது நம் உள்ளத்திலேயே உற்பத்தியாக வேண்டும்.
*உணர்ச்சி மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாமே அன்றி, அறிவு மூலமாக அதைப் பெற முடியாது. சொல்லப்போனால் அறிவு, நம்பிக்கைக்கு தடையாகவே இருக்கும்.
*வாழ்வில் தடுமாற்றம், மயக்கம் ஏற்படும் போதெல்லம் அறிவு பயன்படுவதில்லை. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும்.
*நம்பிக்கை இருப்பது போல நடிப்பதால் பயன் உண்டாகாது. பிறர் கூறும் வதந்தியான தீயசெய்திகளுக்கு, செவி சாய்ப்பதும் நம்பிக்கையின்மையின் அறிகுறியே.
*நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் லட்சியத்தை நோக்கி செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதி. ஆனால், சிறிதும் ஆணவம் இருப்பது கூடாது.
*குறைபாடு இல்லாத மனிதனே இல்லை. அதனால் அடுத்தவர்களின் குறைபாடுகளை மட்டும் கண்டிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை.
*சந்தேகப்படாமல் முழுமையாக நம்புவதே நல்ல நட்பு. நண்பனின் குறைபாடுகளை அறிந்து நல்வழிப்படுத்தாதவன் நல்ல நண்பனாக மாட்டான்.
*ஆடம்பர பொருட்களை ஒருவருக்கொருவர் அளித்துக் கொள்வது நட்புக்கு விரோதமான செயல். அன்புடன் உதவி செய்து கொள்வது தான் நட்பின் அடையாளம்.
*பல விஷயங்களில் ஒற்றுமை வேண்டும் என்பது கூட நட்புக்கு அவசியமில்லை. அதற்காக, கருத்து வேற்றுமையால் மனக் கசப்பை உண்டாக்குவது கூடாது.
*ஒவ்வொரு காலடியையும் நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள். உங்களின் பாதைக்கான ஒளியை காட்டி கடவுள் வழிகாட்டுவார்.
*நேர்மையாக வியாபாரம் செய்வது என்பது கடினம். ஆனால் அது ஒன்றும் முடியாத செயல் இல்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar