Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தோடரின மக்களின் வில்-அம்பு சாஸ்திர ... திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது! திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமிக்கு அடியில் கட்டடம்: செஞ்சி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2013
10:11

செஞ்சி: செஞ்சி அருகே, ஏரியில் நடந்த, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையின் போது, பூமிக்கு அடியில் கருங்கல் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இங்கு, அகழ்வாய்வு நடத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, பொன்பத்தி கிராமத்தில்,31ம் தேதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஏரியில் மண் எடுக்கும் பணி நடந்தது. அப்போது, ஊரை ஒட்டிய பகுதியில், கருங்கல் கட்டுமானம் தென்பட்டுள்ளது.பணியின் துவக்கத்தில் காணப்பட்ட செங்கல் கட்டுமானத்தை, அங்கு பணிபுரிந்த கிராம மக்கள் உடைத்து எடுத்து விட்டனர். அடுத்து,10 அடிக்கும் அதிகமாக கட்டுமானம் நீண்டதால், சந்தேகமடைந்து, கட்டுமானத்தை குலைக்காமல் மண்ணை மட்டும் எடுத்தனர். இரண்டு அடி அகலத்தில், 3 முதல், 7 அடி நீளம் வரையிலான பலகை கற்களை தரைத்தளம் போல் பதித்துள்ளனர். இதையொட்டி, கருங்கல் மற்றும் செங்கல் கட்டுமானம் உள்ளது. இந்த இடத்தில்,மண்டபம், கோவில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்துள்ளது. இங்கு, தொல்பொருள் ஆய்வு துறையினர், அகழ்வாய்வு நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உறை கிணறு:கடந்த ஆண்டு, இந்த கிராமத்தை அடுத்துள்ள, ஆற்றங்கரை பகுதியில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சுடுமண் உறை கிணறு இருந்ததை, ஆய்வாளர் கண்டு பிடித்தார். இதை, அரசு கண்டு கொள்ளாததால், நில உரிமை யாளர், சில மாதங்களில், மண்ணை கொட்டி மூடிவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar