Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ... கொங்கணகிரி கோவிலில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு: போக்குவரத்துத்துறை ஆணையர் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 நவ
2013
10:11

விருதுநகர்: சபரிமலைக்கு அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில், பக்தர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை ஆணையர் பிரபாகர் ராவ், உத்தரவிட்டுள்ளார். நவ.,17ல், கார்த்திகை மாதம் பிறக்கிறது. அன்று முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிவர். மண்டல பூஜை, மகரஜோதியையொட்டி, சபரிமலை சென்று, சுவாமியை தரிசிப்பர். இதற்காக, தமிழகத்தில் இருந்தும், பிறமாநிலங்களில் இருந்தும், தமிழகம் வழியாக, தினமும் அதிகளவில் வாகனங்கள் செல்லும். விபத்தில் சிக்கும் நிலையும் ஆண்டுதோறும் தொடர்கிறது. இதை தொடர்ந்து கேரள அரசு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், ""ஐயப்ப பக்தர்கள் பலியாவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும், என, வலியுத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, அடிக்கடி வாகன சோதனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் பிரபாகர் ராவ், அனைத்து மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி,"" ஆணையர் உத்தரவுப்படி, சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை சோதனையிட உள்ளோம். நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பயணித்தால், சம்பந்தப்பட்ட வாகனம் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதா அல்லது பறிமுதல் செய்வதா என்பது தொடர்பாக, ஆணையரின் அறிவுரை பெற்று, முடிவு செய்யப்படும். அனைத்து வாகனங்களிலும், முறையான ஆவணங்கள் இருக்க வேண்டியது அவசியம். சபரிமலைக்கு, பக்தர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்ய அனுமதியில்லை. அவ்வாறு செல்வோரின் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும். விபத்து, உயிர்பலியை தவிர்க்கவே, இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மகரஜோதி பூஜை முடியும் வரை, இது தொடரும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar