திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, புரட்டாசி மாதம், வருடாந்திர பிரம்மோற்சவம் நடப்பது போல், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, கார்த்திகை மாதம், பிரம்மோற்சவம் நடத்துவது வழக்கம். இம்மாதம், 28ல் தொடங்கும் பிரம்மோற்சவ விழா, டிச., 7ம் தேதி காலை, பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைகிறது.