Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர்! தொழிலில் முன்னேற்றம் பெற எந்த ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
படித்ததில் பிடித்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2013
04:11

போர்ப்பந்தரில் காந்திஜி பள்ளியில் படித்த நாட்களில் பாடம் தவிர, கதை ஏதும் படிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை.  ஒருநாள் தந்தையார் கரம்சந்த்காந்தி வாங்கிய சிரவணனின் பிதுர்பக்தி நாடகம் என்ற புத்தகம் கண்ணில் பட்டது. சும்மா புரட்டுவோமே என்று தான் எடுத்தார். ஆனால், வாசிக்க வாசிக்க பரவசம்... புத்தகத்தை கீழே வைக்கவில்லை.  சிரவணன் என்ற சிறுவன் பார்வையில்லாத பெற்றோர் மீது காட்டிய அன்பை சொல்லும் கதை அது.  ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், படம் (பயாஸ்கோப்) காட்டும் ஒரு குழுவினர் போர்ப்பந்தர் வந்தனர். அந்தக் குழுவினரிடம், பார்வையில்லாத பெற்றோரை, காவடியில் வைத்து தோளில் சுமக்கும் சிரவணனின் படம் இருந்தது. அந்தப் படத்தை காந்திஜி பார்த்தார். அது அழியாத முத்திரையாக, அவரது மனதில் பதிந்து விட்டது.  நீ பின்பற்றுவதற்கு இவனே சரியான உதாரணம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். இதையடுத்து ஒரு நாடக குழுவினர் வந்தனர். அவர்கள் நடித்த ராஜா அரிச்சந்திரா நாடகத்தைப் பார்க்க தந்தையின் அனுமதியுடன் சென்றார். (இந்தக் காலத்தில் பிள்ளைகள் பெற்றோருக்கும் தெரியாமல், வகுப்பையும் புறக்கணித்து விட்டு சினிமாவுக்கு செல்வது வருத்தம் தானே! இவர்களுக்கெல்லாம் காந்திஜியின் சரிதையை பாடமாக வைத்தால் என்ன!) எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தோன்றாத விதத்தில் நாடகம் இருந்தது. மனதிற்குள் தன்னையே அரிச்சந்திரனாக கற்பனை செய்து கொண்டார். அரிச்சந்திரன் போல எல்லோரும் ஏன் சத்தியசீலர்களாக ஆகக் கூடாது? என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அவனது சத்திய வாழ்வு அவருக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. உண்மை பேசுவதை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar