திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7 :00 மணிக்கு மூலவர் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, வழிபாடு நடந்தது. ராஜா குருக்கள் தலைமையில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.