மதுரை உசிலம்பட்டியில் மாசாண கருப்பு கோயில் உள்ளது. இங்கு அருளும் விநாயகருக்கு சூடாக கஞ்சி வார்த்து, அபிஷேகித்து வழிபட, அந்தக் கஞ்சியின் சூடு தணிவதற்குள் மழை பெய்யும் என்பது ஐதீகம். மழை வேண்டும் காலங்களில், இப்பகுதியில் ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் அரிசி, சோளம், கம்பு முதலிய தானியங்களைப் பெற்று, கஞ்சி வார்த்து பிள்ளையாரை வழிபடுகின்றனர்.