ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பே, அதற்கான உணவாக தாய்ப்பாலைச் சுரக்கச் செய்வது இறைவன் கருணை. அதுபோல, இயற்கை வளங்களுடன் கூடிய இந்த உலகைப் படைக்கும் முன்பே பிறக்கப் போகும் உலக உயிர்களுக்கு நல்வழி காட்டும் நூல்களாக இறைவன் வேதங்களைக் கூறியுள்ளார். இதற்கு சப்த பிரபஞ்சம் என்று பெயர். எல்லா யுகங்களுக்கும் பொதுவாக உள்ளது வேதங்கள்.