Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ... திருக்காமீஸ்வரர் கோவிலில் ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை திருக்காமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.2 கோடியில் புதிய தங்கசப்பரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 நவ
2013
10:11

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலுக்கு ஆவணி, மாசித் திருவிழா விற்கு புதிய தங்கச் சப்பரம் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் மாசித்திருவிழா ஏழாம் நாளில் புதிய தங்க சப்பரம் வீதி உலா வர உள்ளது.    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களில்7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி எழுந்தருளும் தற்போது உள்ள தங்கச் சப்பரம் சுமார் 90 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இப்போது உபயதாரர் நிதியில் இருந்து சுமார் 2 கோடி செலவில் புதிய தங்கச்சப்பரம் செய்யும் பணி கடந்த சில் மாதங்களாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சிவன் கோவிலில் வைத்து நடைபெறும் சப்பரம் செய்யும் பணியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏஆர்சி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பழைய சப்பரத்தின் பாரம்பரியம் மாறாத வகையில் 8.75 அடி உயரமும், 8.25 அடி அகலத்துடன் சப்பரம் உருவாகி வருகிறது. 6 கிலோ தங்கம், 200 கிலோ செம்பு, 50 கிலோ பித்தளை ஆகிய உலோகங்கள் மற்றும் 2500 கிலோ பர்மா தேக்கு மரங்களால் சப்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் நேற்று பார்வை யிட்டார். சப்பரத்தின் பணிகள் நிறைவு பெற்று, வரும் மாசித்திருவிழா ஏழாம் நாளில் புதிய சப்பரம் வீதி உலா வர உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது மணியம் தமிழரசன், சப்பர மேற்பார்வையாளர்கள் மணி, கவிராயர் பாலா, நகர கூட்டுறவு வங்கிச்செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar