Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப பக்தர்களுக்காக கட்டணமில்லா ... மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான சோமசமுத்திரம் சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2013
10:11

செஞ்சி: சோமசமுத்திரத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புராதன நகரங்களில் ஒன்றான செஞ்சியை சுற்றி பல கோவில்கள் உள்ளன. பல்லவர்கள், நாயக்கர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் கட்டிய இக்கோவில்களின் பெரும் பகுதி ஆற்காட்டு நவாப்பின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டன. இதில் செஞ்சிக்கோட்டை சந்திரகிரி மலைக்கு பின்புறம் சோம சமுத்திரம் கிராமத்தில் பழமையான சிவன் கோவிலும் தப்பவில்லை. இடிபாடுகளுடன் இருக்கும் இந்த கோவிலில் இருந்த சிவலிங்கத்தையும், நந்தி ஒன்றையும் எடுத்து கோவிலுக்கு வெளியே உள்ள திறந்த வெளியில் கூரை அமைத்து கிராமமக்கள் வழிபடுகின்றனர். மதில் சுவருடன் உள்ள இந்த கோவிலின் வாயில் பகுதியும், அதை அடுத்துள்ள மண்டபமும் இடிந்து உள்ளே செல்ல முடியாத வகையில் உள்ளன. வட்ட வடிவிலான கருவறை கோபுரம் இடிந்த நிலையில் உள்ளது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று பிரகாரம் என சிறந்த முறையில் பெரிய தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டியுள்ள இந்த கோவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. தொன்மை வாய்ந்த பகுதி என்பதற்கு ஆதாரமாக இங்குள்ள மலைமீது 6ம் நூற்றாண்டை சேர்ந்த சமண படுக்கை உள்ளது. கோவில் எந்த ஆட்சியின் போது கட்டப்பட்டது என்று தெரிந்து கொள்வதற்கும் உள்ளே செல்ல முடியாத நிலையில் இந்த கோவில் உள்ளது. நமது கலாசாரத்தையும், கட்டட கலையையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ள இக்கோவிலை புதுப்பிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மீது தமிழக அரசு, அறநிலையத்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து விரைவில் கோவிலை சீரமைப்பார்கள் என பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar