Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவேரியார்புரம் தூய பிரான்சிஸ் ... சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமியின் அஜாமிளன் சரித்திர சொற்பொழிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
10:12

தூத்துக்குடி: தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையம் சார்பில் சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடக்கும் 7- நாள் சொற்பொழிவின் 3-ம் நாளான நேற்று ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமி, அஜாமிளன் சரித்திரம் குறித்து சொற்பொழிவு ஆற்றினார். அதில், சுவாமி கூறியதாவது,"" அஜாமிளன் சரித்திரம் முழுவதும் நாராயண நாமத்தின் பெருமையை குறிக்கிறது. நாராயணா, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்று பகவானின் நாமங்களை நாவில் விடாப்பிடியாக இருத்தி வைத்திருக்கும் ஒருவன் எத்தகைய பாவங்கள் செய்தாலும், வேளை வரும் போது அவனை திருத்தி பகவான் ஆட்கொள்வார். முதலையின் பிடியில் மாட்டிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை பகவானின் நாமத்தை கூறியதால் அது மோட்சம் அடைந்தது. அது போல தினமும் நாமசங்கீர்த்தனம் செய்யும் பக்தர்களுக்கு பாவம் செய்யும் எண்ணம் படிப்படியாக குறைந்து நல்ல எண்ணங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது. உதாரணமாக களவு தொழில் மூலம் வந்த பொருட்களை கொண்டு நாராயண சேவை செய்த திருமங்கை ஆழ்வாரை திருத்தும் பொருட்டு அவருடைய காதில், நாராயணா என்ற நாமத்தை எம்பெருமாள் உறைத்தார். நாராயண நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் திருமங்கை ஆழ்வாரிடம் இருந்து களவு எண்ணம் நீங்கியது. தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வாழும் ஒருவனின் அரிபக்தி ஒன்றே பாவத்தைப் போக்கும். கோவிலுக்கு சென்று மூர்த்தி வடிவாக இருக்கும், எம்பெருமாளை வணங்குவதற்கு ஈடானது அவரின் நாமத்தை நாவில் இருத்தி அனுதினமும் உச்சரிப்பது. எனவே அனைவரும் தினமும் நாமசங்கீர்த்தனம் செய்யுங்கள். இவ்வாறு கூறினார். இன்று பிரகளாத சரித்திரம் குறித்த சொற்பொழிவை முரளிதர சுவாமி நிகழ்த்துகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar