ஐயப்பனை புத்தமத துறவி என்றும் சிலர் கூறுகிறார்கள். பம்பையில் தவக்கோலத்தில் இந்த பிட்சு வசித்தார். எதிரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பாண்டிய நாட்டைவிட்டு கேரளத்தின் கிழக்கு மலைகளை கடந்து பம்பை வந்தடைந்த பாண்டிய மன்னரையும், அவரது மரபினரையும் அருகிலுள்ள பகுதிகளுக்கு ஐயப்பனும் அவரது சேவர்களும் அதிபதிகள் ஆக்கினர் என்று கூறப்படுகிறது. பந்தள மன்னரின் அரண்மனையில் அந்த பிட்சு நட்புறவுடன் வாழ்ந்தார் என சாஸ்தா வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளது.