சாஸ்தா என்ற சொல் சாத்தா என்ற சொல்லிலிருந்து ஏற்பட்டதாகும். சில மாவட்டங்களில் சாத்தான் கோயிலுக்கு செல்வதாக சொல்வார்கள். சாத்து என்னும் சொல்லுக்கு கூட்டம் என பொருள். சாஸ்தா கோயில்கள் காட்டிற்குள்தான் அனேகமாக இருக்கும். எனவே இங்கு கூட்டமாகத்தான் மக்கள் செல்வார்கள். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா எனப்பட்டார்.