Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு! சபரிமலை பக்தர்களுக்கான விபத்து காப்பீடு அதிகரிப்பு! சபரிமலை பக்தர்களுக்கான விபத்து ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கெடுபிடிகள் அதிகரிப்பு: 24 மணி நேர கண்காணிப்பில் சன்னிதானம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2013
12:12

சபரிமலை: டிச.ஆறு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் பாதுகாப்பு கெடுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானம் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் ஸ்ரீகோயில், 18-ம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். கோயிலின் எல்லா வாசல்களிலம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்கள் நிறுவப்பட்டுள்ளது. கேரள போலீசின் சிறப்பு புலனாய்வு போலீசார் 150 பேர் வந்துள்ளனர். இவர்கள் பக்தர்கள் வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களுடன் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  சன்னிதானத்தில் அடையாள அட்டை இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவைப்பட்டால் பக்தர்களின் இருமுடி கட்டு மற்றும் பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். சந்தேகப்படும் வகையில் யாரை கண்டாலும் அவர்களை உடனடியாக போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரிக்கப் படுவார்கள். இதுபோல பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் படுவார்கள்.  சபரிமலையை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இங்கு கேரள போலீசும், மத்திய போலீசும் இணைந்து ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட கேரள போலீஸ் ஏடிஜிபி ஹேமச்சந்திரன் இன்று முதல் இரண்டு நாட்கள் சபரிமலையில் முகாமிடுகிறார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் ஆய்வு ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar