Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னதான திட்ட கோவில்களில் காய்கறி ... நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை விழாகொடியேற்றத்துடன் துவக்கம்! நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவிலில் தீயுடன் மா விளக்கு சாப்பிட்ட பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2013
10:12

ஆலங்குடி: ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியில் விநாயகர்கோவில் வழிபாட்டில் குழந்தைகள் உட்பட பக்தர்கள் பலர் தீயுடன் மா விளக்கை சாப்பிட்டனர். ஆலங்குடி அருகே புள்ளான்விடுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், பிள்ளையார் நோன்பு விழா நடந்தது. கார்த்திகை தீபத்திற்கு சஷ்டி திதியும், சதயம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் பிள்ளையார் நோன்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் விநாயகரை வைத்து வணங்குபவர்களே இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விநாயகருக்கு பிடித்த கொலுக்கட்டை, பொறிகடலை, எள்ளுருண்டை, பொங்கல் வைத்து விநாயகர் பாடல்களை பாடிய பிறகு மா விளக்கில் திரியை வைத்து அதில் தீ வைத்து தீயுடன் வாயில்போட்டு விழுங்குகின்றனர். இதை ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் தீயோடு விழுங்குவது பார்ப்பவர்களை பரவசமடையச் செய்தது. இதுகுறித்து புள்ளான்விடுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் செட்டியார் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடுவார்கள். கோவிலில் கொண்டாடப்படுவது இல்லை. வீட்டில் வைத்து வணங்கும் விநாயகருக்கு இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி திரிப்பழம் (தீயுடன் சாப்பிடும் மா விளக்கு) சாப்பிட்டால் அவர்களுக்கு ஆண் வாரிசுகள் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar