Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி நிறைவு சிறப்பு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமைதியையும் வளர்ச்சியையும் வலியுறுத்தி... ஆதினங்கள் வழங்கிய பொங்கல் வாழ்த்தும் ஆசியும்!
எழுத்தின் அளவு:
அமைதியையும் வளர்ச்சியையும் வலியுறுத்தி... ஆதினங்கள் வழங்கிய பொங்கல் வாழ்த்தும் ஆசியும்!

பதிவு செய்த நாள்

15 ஜன
2026
01:01

கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ஆதினங்களும், மடாதிபதிகளும்.


பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் 


நல்லறம் ஓங்க வேண்டும். நற்றமிழ் பயில வேண்டும். சொல்லியவாறு செய்யும் தொண்டுள்ளம் வேண்டும், வாழ்க்கை கல்வியால் இளையோரிடமுள்ள கசடுகள் நீங்க வேண்டும். பல்வளம் பெற்று பொங்கும் பால்பொங்கல் பொழியட்டும்.


சிரவையாதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் 


தமிழர்கள் இயற்கையையும் சூரியனையும் தெய்வமாக வணங்கினர். பெரும் பொலிவோடு, பழமை மாறாமல் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம். அனைவரிடமும் ஒற்றுமை மேலோங்கட்டும். அறிவு சார் சமுதாயமாக தமிழ் சமுதாயம் திகழட்டும் வெற்றி நிலைக்கட்டும்.


காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் 


பாடுபட்டு சேர்த்து வைத்த பண்பாடு புகழனைத்தும் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்திடுவோம், புத்தரிசி, புதுப்பானை, புதுவெல்லம் பொங்கலினை புத்தமுதாய் உண்டிடுவோம்; புத்துணர்வு கண்டிடுவோம். தை மகளை வரவேற்போம். கன்னித்தமிழ் காத்திடுவோம்.


ஸ்ரீ அய்யனார் ஆதினம் சீனிவாச சுவாமிகள்: 


வெற்றி, வளம், செல்வம், சந்தோஷம், நிம்மதி அனைவரது வாழ்வில் நிறையட்டும். வளர்ச்சி, உயர்வு, புதிய வாய்ப்பு அனைத்தும் கிடைக்கட்டும். குடும்பம் ஒற்றுமை மேலோங்கட்டும்; மனதில் பக்தி வளரட்டும்.


ஸ்ரீ தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் 


மும்மாரி மழை பொழிந்து நோய் நொடியின்றி மக்கள் வாழ்ந்திடவும், மக்களிடம் கைமாறு பெருக வேண்டும். அன்பும் பண்பும் நிலைத்திருக்க வேண்டும்.


இவ்வாறு, ஆதினங்கள், மடாதிபதிகள்தெரிவித்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி இயக்கம் சார்பில், நடந்து வந்த மார்கழி மாத பஜனை சேவை, முத்தியால்பேட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar