Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலம் கோயிலில் தேரோட்டம் ... ஏழு ஆண்டுக்கு பின் ஊர் கூடி திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்கோயில் தேருக்கு செட் அமைக்கும் பணிதொழிலாளர்கள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2013
11:12

தூத்துக்குடி: தினமலர் செய்தி எதிரொலியால் தூத்துக்குடி சிவன் கோயில் தேருக்கு செட் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. தொழிலாளர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி சிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவின் போது விநாயகர், சுப்பிரமணிய சுவாமிகள் செல்வதற்கும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் போது பாகம்பிரியாள் அம்மன் செல்வதற்கு உரிய தேர் தேரடியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேருக்கு தற்காலிக செட் அமைத்து பாதுகாப்பு செய்ய வேண்டியிருந்தது. இதற்காக சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேருக்கு நிரந்தர செட் அமைப்பது குறித்து தேர் திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.வி.எம். மணி, கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், சிவன் கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் பலர் நன்கொடையாளர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.இந் நிலையில் தேர் செட் இல்லாமல் நிற்பதால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்து வருவது குறித்து பக்தர்கள் வேதனைப்பட்டனர். இது குறித்து தினமலரில் செய்தி வெளியாகியது. தினமலர் செய்தியை தொடர்ந்து தேருக்கு நிரந்தர செட் அமைப்பது குறித்து விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தேருக்கு நிரந்தர செட் அமைப்பதற்கு நான்கு புறமும் கம்பிகள் நிறுத்தம் செய்து தேரை முழுமையாக மூடி பாதுகாக்கும் வகையில் செட் போடும் பணி துவங்கியது. இந்த பணிகள் இன்னும் இரண்டு நாளில் முடியும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். நேற்று பணிகள் நடப்பதை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் பார்வையிட்டனர். கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar