Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாஞ்சிநாத சுவாமி கோவிலில் ... கிறிஸ்துமஸ் சிந்தனை -2: தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்! கிறிஸ்துமஸ் சிந்தனை -2: தகுதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2013
11:12

ஒருவரை விட ஒருவர் அழகு, குணம், படிப்பு, பணம், பண்பு என மேலிட்டிருப்பது உலகத்தின் இயல்பு. ஆனால், தன்னை விட அழகானவர்களையோ, பண்பாளர்களையோ பார்த்து பொறாமை கொள்வது தவறு. ஒருவரை பார்த்து, அவரைப் போல் தன் அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ளலாமே தவிர, பொறாமை கொள்ளக் கூடாது என்பதை, அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா மூலம், உலகுக்கு உணர வைத்தனர் முப்பெரும் தெய்வங்கள். அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் தெற்கிலுள்ள வனப்பகுதியில் தங்கியிருந்தார். தனக்கு சிவன், திருமால், பிரம்மாவைப் போல, சகலத்திலும் சிறந்த குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள் அனுசூயா. அதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். தவம் என்றால், கண்ணை மூடி தியானத்தில் இருப்பதல்ல... ஒருவருக்கு உலகில் என்ன பணி வாய்க்கிறதோ, அதை சிரத்தையுடன் செய்தால், அதுவே தவம். அனுசூயாவுக்கு ஒரே பணி தான்; கட்டிய கணவரின் மனம் கோணாமல் நடப்பது! தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்த அவள், அவரை தினமும் வணங்கிய பிறகே பணி களைத் துவக்குவாள். அவரது பாதத்தைக் கழுவி கிடைக்கும் நீரை, தன் தலையில் தெளித்துக் கொள்வாள். கணவர் மனதுக்கு மாறாமல் நடந்ததால், "பதிவிரதை என்ற அந்தஸ்து பெற்றாள். இத்தகைய பெண்களுக்கு தெய்வம் கவுரவம் அளிக்கும். பதிவிரதையான அவளது விருப்பப்படி, மூன்று குழந்தைகளை அருள, மும்மூர்த்திகள் முடிவு செய்தனர். அதாவது, தாங்களே அவளுக்கு குழந்தைகளாக பிறக்க முடிவெடுத்தனர். இதற்காக, தங்கள் தேவியரின் மனதில் பொறாமைத்தீயை மூட்டினர்.

இந்த உலகத்திலேயே அனுசூயா தான் பதிவிரதை... என்று அவர்கள் காதில்படும்படி பேசினர். அப்படியானால், நாங்கள், உங்கள் சொல் கேட்பதில்லையா? என தேவியர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட, அனுசூயாவின் பதிவிரதா தன்மையை நீங்களே புரிந்து கொள்வீர்கள்... என்ற தெய்வங்கள், அவளது குடிசைக்கு சந்நியாசிகளாக வேடமிட்டு வந்தனர். பெண்ணே... எங்களுக்கு உணவளிக்க வேண்டும். ஒரு நிபந்தனை...நீ நிர்வாணமாக உணவளித்தால் தான் ஏற்போம்... என்றனர். இக்கட்டான சூழலிலும் கலங்காதவர்களே ஞானிகள். அனுசூயா அந்த ரகத்தில் அடக்கம் என்பதால், அவள் சற்றும் கலங்கவில்லை. தன் கணவரின் பாதத்தீர்த்தத்தை எடுத்து, அந்த துறவிகள் மேல் தெளித்தாள். அவர்கள் குழந்தைகளாகி விட்டனர். குழந்தைகளைப் பார்த்ததுமே தாய்மையுணர்வு பொங்கி பால் சுரந்தது. நிர்வாண நிலையில் அவர்களுக்கு பாலூட்டினாள். தங்கள் கணவன்மாரின் நிலையால் பயந்து போன தேவியர், அனுசூயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டினர். இதனிடையே, அத்திரி முனிவர் அங்கு வந்தார். தெய்வங்களே தனக்கு பிள்ளையானது கண்டு மகிழ்ந்த அவர், குழந்தைகளை ஒன்று சேர்த்தார். மூன்று முகம், இரண்டு கால்கள் கொண்ட குழந்தையாக அது மாறியது. அக்குழந்தைக்கு தத்தாத்ரேயர் என பெயரிட்டார். தங்கள் தேவியரின் பொறாமை அழிந்ததால், முப்பெரும் தெய்வங்களும் அவர்கள் முன் தோன்றினர். தங்கள் பிரதிநிதியாக தத்தாத்ரேயர் உலகை பரிபாலிப்பர் என்றனர். இவரது பிறப்பின் மூலம், உலகில் பிறந்த எல்லாருமே, ஏதோ ஒருவகையில் மேம்பட்டுள்ளனர். எனவே, அவர்களைப் பார்த்து பொறாமைப்படவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ கூடாது என்பதும், எல்லாரும் உயர்ந்தவர்களே என்பதும் உணர வைக்கப்படுகிறது. உத்தரபிரதேசத்திலுள்ள ரிஷிகேஷத்தில், சிவானந்த ஆசிரமம் அருகில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. சென்னை கந்தாஸ்ரமத்தில் சன்னிதி இருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar