செஞ்சி செஞ்சி தாலுகா முக்குணம் முக்குன்ற நாதர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடுநடந்தது.இதை முன்னிட்டு முக்குன்றநாத உடையாருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். முக்குன்ற நாதர் கோவில் உலா நடந்தது. உபயதாரர் கணேசன், பிரேமா, நிர்வாகிகள் பச்சை வண்ணன், சண்முகம், நாராயணசாமி, செல்லகுட்டி, பழனி, ஜெயராமன் கலந்து கொண்டனர்.