Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது ... கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2013
12:12

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் விழாவன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், ஐந்தாம் நாள் விழாவில் கருட தரிசனமும், ஏழாம் நாள் இரவு கைலாச பர்வத வாகன பவனியும் நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை 8.10 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட டி.ஆர்.ஓ., பழனிச்சாமி, எஸ்.பி., மணிவண்ணன், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் சோணாச்சலம், ஜீவானந்தம், கோயில் மேலாளர் ஆறுமுகநயினார், கணக்கர் கண்ணன், அ.தி.மு.க. பொறுப்பாளர் ஹேமந்த் தேர்வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.முதலில் வினாயகர் தேரை சிறுவர், சிறுமியரும், சுவாமி தேரை ஆண்களும், அம்மன் தேரை பெண்களும் நான்கு ரதவீதிகள் வழியாக இழுத்து வந்தனர். காலை 11 மணிக்கு தேர் அதன் நிலையை வந்தடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். மாலையில் சுவாமி மண்டகப்படிக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலையில் ராமசுவாமி, கோமதி திருநாவுக்கரசு சமய சொற்பொழிவும் நடந்தது. இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி பவனி நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி தம்பதி சமேதராய் எழுந்தருளினர். இரவு 12.15 மணிக்கு தாணுமாலயன் சுவாமி கோயில் முன்பு சிறப்புமிக்க சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது. கோட்டாறு வினாயகர், குமாரகோயில் மற்றும் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் தாய், தந்தையை விட்டு பிரிந்து செல்லும் உருக்கமான சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar