Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜை வால்பாறை ஐயப்ப சுவாமி கோவில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
10:12

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது. மார்கழியில் வரும் திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசனம் என கொண்டாடப்படுகிறது. அதன் படி, நேற்று வந்த மார்கழி திருவாதிரை நாள், பொள்ளாச்சி பகுதிகளில் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஜோதிநகர் சிவன் கோவில்,தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில், ரமணமுதலிபுதூர் மண்கண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கோவில்களில் நடந்த சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா தரிசன வழிபாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை 6:00 மணிக்கு சிவ பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று திருவாதிரையை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நடராஜர் உற்சவமூர்த்தியை வழிபட்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று திருவாதிரையை ஒட்டி, நடராஜர், சிவலோகநாயகி உற்சவ சிலைகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், அனைத்து வகையான கனிகள் மற்றும் 16 வகையான பொருட்களில் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின், இச்சிலைகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசனம் காலை 7.30 மணியளவில் தீபராதனை காட்டப்பட்டது. திருவாதிரையை ஒட்டி சுமங்கலி விரதம் இருந்த பெண்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியகளந்தை ஆதிஸ்வரன் கோவிலிலும் இவ்விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar