Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு ... திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் 40வது ஆராதனை விழா திருக்கோவிலூர் ஞானானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை கூத்தனுக்கு தெவிட்டாத அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2013
10:12

அவிநாசி: ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, கூத்த பிரானுக்கு 108 திரவியங்களில் மகாபிஷேகம் நான்கு மணி நேரம் நடந்தது. கூடிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "நமசிவாய வாழ்க கோஷமிட்டு, பரவசம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில், திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் வீதியுலா நடந்தது. ஆருத்ரா தரிசன நாளான நேற்று, அதிகாலை 3.00 மணிக்கு மகா அபிஷேகம் துவங்கியது.கூத்த பிரானாகிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மைக்கும், விபூதி, அன்னம், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சகவ்யம், அருகம்புல், சுக்குப்பொடி, நெல்பொரி, கரும்பு, அன்னாசி, திராட்சை, பன்னீர், ஜவ்வாது, சந்தானாதி தைலம், நெய், சொர்ணம் உள்ளிட்ட 108 வகை பொருட்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை 3.00 மணிக்கு துவங்கிய அபிஷேகம், காலை 7.00 மணி வரை நடந்தது.சிறப்பு மலர் அலங்காரத்துக்குபின், ரிக், யஜூர், சாம, அதர்வன என நான்கு வேதங்கள், சிவாகமம் ஆகியவற்றை சிவாச்சாரியார்கள் பாராயணம் செய்ய, தேவாரம், திருவெம்பாவையை ஓதுவா மூர்த்திகள் ஓத, மங்கல இசை ஒலிக்க, ஆடல் வல்லானும், அம்மையும், பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். உற்சவமூர்த்திகள், சப்பரத்தில் வைக்கப்பட்டு, கோவில் முன்புள்ள அரச மரத்தில் பட்டி சுற்றப்பட்டு, ரத வீதிகளில் வீதியுலா நடந்தது.மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையை, சிவக்குமார சிவம் தலைமையில், கோவில் சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள், 2.00 மணிக்கே கோவிலில் திரண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை, காடாம்பாடி ஐநூற்று கொங்கு செட்டிமார் தர்மபரிபாலன சபையினர் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar