Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சன்னிதானத்தில் போலீஸ் ... ஊட்டி ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்! ஊட்டி ஹெத்தையம்மன் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்துணர்ச்சி முகாமில் திருநள்ளார் கோவில் யானை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2013
04:12

காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவில் ப்ரக்குருதி யானை நேற்று இரண்டாம் முறையாக மேட்டுபாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமிற்காக புறப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் நிர்வாகம் மேற்கு தொடர்ச்சி மலை சிமோகாவில் உள்ள சக்ரபால் யானைகள் முகாமில் இருந்து ப்ரக்குருதி என்ற 6 வயது குட்டி பெண் யானை கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போது 9 வயதாகிறது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில் திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானையும் பங்கு பெற புதுச்சேரி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது. இதையெடுத்து திருநள்ளார் ப்ரக்குருதி யானை கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு நேற்று புறப்பட்டது. யானையுடன் 2 பாகன்களும் சென்றனர். முகாமிற்கு யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,சிவா,முன்னால் எம்.எல்.ஏ.,கணபதி,கோவில்கள் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி ஆகியோர் முன்னிலையில் சிவாச்சார்யர்  யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாரதனை காண்பித்தார். பின் யானைக்கு பிரசாதம், பழங்கள் வழங்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு முகாமிற்கு புறப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar