திருச்சி: அனுமன் ஜெயந்தியை யொட்டி, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் உற்சவருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை சாற்றப்பட்டது. திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. உற்சவ ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு பிரம்மாண்ட வடைமாலை நேற்று சாற்றப்பட்டது. மூலவருக்கு, 10,008 ஜாங்கிரி மாலை, நேற்று மாலை சாற்றப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.